search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசாந்த் பூஷன்"

    • தேர்தல் பத்திர திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்துசெய்யப்பட்டது.
    • தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் பத்திர திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டால் ரத்துசெய்யப்பட்டது. 2018 முதல் 2024 வரை தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ததற்காக மத்திய அரசிடமிருந்து ரூ.10.68 கோடி பாரத ஸ்டேட் வங்கி கமிஷன் பெற்றுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்வியின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர திட்டத்தில் மேலும் ஒரு முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    ஒரு நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவு செய்தால்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க முடியும் என்பது நிறுவனங்கள் சட்டம். மீறுவது சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திர தகவல்களின்படி, நிறுவனம் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடையாத சுமார் 20 நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு 103 கோடி ரூபாயை நிதியாக வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் பிரசாந்த் பூஷன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேர்தல் பத்திரங்கள் ஊழல் என்ற பெயரில் பல மோசடிகள் செழித்து வளர்ந்தன. ஒப்பந்தங்களுக்கான பத்திரங்கள், கொள்கை மாற்றங்களுக்கான பத்திரங்கள், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, மருந்துக் கட்டுப்பாட்டாளரிடமிருந்து பாதுகாப்பிற்கான பத்திரங்கள், ஜாமீன் பெறுவதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கும் பத்திரங்கள், பணமோசடிக்கான பத்திரங்கள், புதிதாக தயாரிக்கப்பட்ட நிறுவனங்களின் பத்திரங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • ஊழல் குற்றசாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது - காங்கிரஸ்
    • மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியது

    ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்படும் அரசியல்வாதிகள் பாஜகவில் இணைந்த உடன் அவர்களின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுவதை தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

    அதனையொட்டி, மோடி வாஷிங் பவுடர், பாஜக வாஷிங் மெஷின் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தி விமர்சித்தது.

    அந்த வாஷிங் மெஷினின் விலை 8,552 கோடி ரூபாய் என்றும், இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற தொகை என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது.

    இந்நிலையில், பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுவதாக கற்பனை செய்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கிண்டலாக தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் ஒன்றை இட்டுள்ளார்.

    அதில், "இப்போது வாஷிங் மெஷின்களையும் தேர்தல் பத்திரங்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நாங்கள் Paytm கொண்டு வர மாட்டோம். நேரடியாக பிரதமருக்கே பணம் கொடுக்கும் PayPM திட்டம் கொண்டு வருவோம் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    • ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
    • விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும்

    தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சாகேட் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், "ஆந்திராவில் உள்ள சிலக்கலூரிப்பேட்டையில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக அவர் விமான படை ஹெலிகாப்டரை பயன்படுத்தினார்.

    தேர்தல் பரப்புரைக்காக செல்லும் போது அரசு ஹெலிகாப்டர், விமானத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    தேர்தல் தேதியை அறிவித்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆகவே தற்போது பிரதமர் மீது விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கிறதா என்பதை பார்க்கலாம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான செய்தியை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "விமானப்படை ஹெலிகாப்டர்களை பிரதமர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது ஒரு ஊழல் நடைமுறையாகும், இதற்காக 1975 ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. ஆனால் இன்று மோடி அரசு பணத்தையும், அரசு ஏஜென்சிகளையும், அரசு ஊழியர்களையும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார்" என்று பதிவிட்டுள்ளார். 

    • இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது.
    • பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

    அதில், பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சுக்பீர் சந்துவையும் ஞானேஷ் குமாரையும் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களாக நியமித்திருக்கிறார் மோடி. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை உருவாக்க முக்கியப் பங்காற்றியவர் ஞானேஷ் குமார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்காக அமித் ஷாவுக்குக் கீழ் பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களும் இதை விமர்சித்துள்ளார். அதில்,

    பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து, தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே புதிய தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையர் பதவிகளில் பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது.
    • பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகளை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது.

    இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கியின் நடவடிக்கைகளை மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்க 115- நாள்கள் அவகாசம் கேட்ட SBI உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு 30 மணி நேரத்தில் வழங்கியிருக்கிறது. அப்படி எதை மறைக்க முற்பட்டது என்பதை மார்ச் 15 ஆம் தேதி வரை காத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். 

    • நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.
    • திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்?

    கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பை இன்று ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய், வரும் 7-ம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.

    வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தேசிய கட்சி பாஜக தான். அதனால் தான் வரும் மார்ச் 7ஆம் தேதி நான் பாஜகவில் சேர இருக்கிறேன். இதற்காக நான் நீண்ட நாட்கள் யோசிக்கவில்லை. சுமார் 7 நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இப்போது பாஜகவில் சேர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். அதில், "திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்? நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளை இவர் கேவலப்படுத்தி இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகி, ஒரு அரசியல் கட்சியில் சேர்கிறார்கள் எனில், அவர்கள் அதுவரை நீதி வழங்காமல் அக்கட்சிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றே அர்த்தம்" என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றத்திலும் மிகப் பெரிய அளவில் ஊழல் உள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி :

    காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.526 கோடி அளவில் பிரான்சிடம் வாங்கியது.  ஆனால், பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசு ரபேல் போர் விமானம் ஒன்றை ரூ.1,670 கோடி அளவில் வாங்கி உள்ளது.

    இதனால், ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், இதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துவருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்தியர்கள்களிடம் குறிப்பிட்டுள்ளதாவது :-

    உச்ச நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கையும் தொடுப்பதற்கு முன்னதாக அங்கு மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதை பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்.

    ரபேல் போர் விமானம் வாங்கியதில் ரூ.36 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து நான் தீர்மானிக்கவில்லை. ஏனெனில், உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது.

    எனினும், ரபேல் விவகாரத்தில் அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை தேர்வு செய்துவிட்டேன். காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை மிகவும் வீரியத்துடன் மக்களிடம் எடுத்து செல்வது பாராட்டுக்குறியது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    ×